Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏற்காடு வனப்பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் வழக்கில் துப்பு துலங்கியது

மார்ச் 25, 2024 03:09

சேலம்,மார்ச்.25:   ஏற்காடு மலை பாதையையொட்டி வனப்பகுதியில் கடந்த வாரம் சூட்கேசில் பெண் சடலம் கிடந்தது இதனை ஏற்காடு போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர். பெட்டியில் இருந்த  ரசீதுகளை வைத்து கடந்த மூன்று நாட்களாக தனிப்படை போலீசார் கோவையில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள சூட்கேஸ் விற்பனை கடை ஒன்றில் பெண் சடலம் கிடந்த சூட்கேஸ் வாங்கியது தெரியவந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.இதில் கோவையைச் சேர்ந்த ஒருவர் சூட்கேஸ் வாங்கிச் சென்று இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அந்த வாலிபரை பிடித்து தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.இவரிடம் விசாரணை செய்ததில் கொலையான பெண் தேனி மாவட்டத்தைச் சார்ந்த சுபலட்சுமி வயது 33 என தெரியவந்துள்ளது. சுபலட்சுமி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் கோவை வாலிபருக்கும், சுபலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கோவையில் வசித்து வந்திருக்கிறார்கள்.இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

சுபலட்சுமிக்கும் வேறு சிலருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதால் கோபமடைந்த கோவை வாலிபர் சுபலட்சுமியை கொன்று உடலை சூட்கேசில் வைத்து ஏற்காடு மலைப்பாதை அருகே உள்ள வனப்பகுதியில் வீசி இருப்பது தெரிய வந்திருக்கிறது.இதனை எடுத்து அந்த வாலிபரை தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்